புதன், அக்டோபர் 19, 2011

போலி மருந்து மாத்திரைகள் - நமது உயிரின் விலை ஒரு BMW கார்

2009 ம் ஆண்டு இறுதியில் தமிழக ஊடகங்களில் மிக பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு செய்தி சென்னையில் ஒரு சிறுமி காலாவதி மருந்தை உட்கொண்டதால் இறந்துவிட்டால் என்று . உடனே அத்தனை சமூக ஆர்வலர்கள்,ஊடகங்கள்,பொது மக்கள், அரசியல்வாதிகள்,அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குச் சென்று ஆறுதல்,நஷ்ட ஈடு எல்லாம் கொடுத்தார்கள் சென்றார்கள். சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட மெடிக்கல் ஷாப் இல் சோதனை நடத்தினார்கள் அப்புறம்தான் தெரிந்தது, இந்தக் காலாவதி மாத்திரைகளின் வர்த்தகம் புற்றீசல் போல் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்று இதில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டான் மீனாட்சி சுந்தரம் என்ற மொத்த மருந்து விற்பனையாளன்.

போலி மருந்து மாத்திரைகள் என்றதும் அது அரசாங்கத்துக்குத் தெரியாமல் தயாரிக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். மருந்து நிறுவனங்களின் கள்ள சந்தையே போலி மருந்து, காலாவதி மாத்திரைகள் எல்லாம். அது என்னவென்று பார்ப்போம்.

நாம் ஏற்கனவே மருந்து மாத்திரைகள் வர்த்தகம் எவ்வாறு நடைபெறுகிறது என்று படித்திரருந்தோம் அதில் super stockist ,stockist என்றும் நாம் அறிந்திருதோம் அல்லவா,இவர்களின் மூலமாகவே தான் காலாவதி மருந்துகள் வர்த்தகத்தில் வலம் வருகின்றன.

பொதுவாக எந்தவொரு மருந்து மாத்திரைக்கும் அதன் ஆயுள்காலம் ( expiry date ) இருக்கும். இந்த expiry date முடிவடையும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இது medical shop இல் இருந்து ,stockist க்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ,stockist என்பவர் sub stockist எனப்படும் சிறு மொத்த விற்பனையாளர்களிடம் அனுப்புகிறார். மிகக் குறைந்த விலைக்கு.(இதில் medical repகளின் பங்கு மிக முக்கியமான ஒன்று அதனை பற்றிய விவரங்கள் தனியாக எழுதப்படும். ஆதலால் இதைக் கவனமாகப் படிக்கவும் ).

இந்த sub stockist கள் அவர்களுக்குத் தெரிந்த medical shop களில் தள்ளிவிடுகிறார்கள். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அதிகம் படிப்பு அறிவு இல்லாத இடங்களில் இருக்கும் medical shop களில்தான் விற்பனை செய்கிறார்கள்.

sub stockist கள் சென்னையில் மட்டுமில்லை, தமிழகம் முழுவதும் நல்ல முறையில் விற்பனையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் வாங்குவதை வாங்கிக்கொண்டு தொழிலில் எந்த ஒரு இடைஞ்சலும் கொடுக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்

இந்தக் காலாவதி மருந்து விற்பனையில் ஒரு சிறுமி பலியானவுடன் பல உத்தம மருத்துவர்கள் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் நோயாளியே நேரடியாக மருந்து மாத்திரை வாங்கி உட்கொள்ளவதால்தான் இது போன்ற விபத்துகள் நடைபெறுகின்றது என்று கிழியக் கிழியப் பேசியதை நாம் கேட்டிருப்போம். அப்படியானால் 2010 ம் வருடம் சென்னை நங்கநல்லூரில் ஒரு பெண்மணி டாக்டரின் தவறான பரிந்துரையாலும் எழுதிக் கொடுத்த மாத்திரையை உண்டதாலும் முடிகொட்டி உடல்வீங்கி இறந்தாரே அது ஏன், அந்த மருத்துவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது?

ஒன்றுமட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். expiry date ஆன மருந்து மாத்திரைகளின் label களை எடுத்துவிட்டு அழகாக வேறொரு லேபிள்களை ஒட்டி வைத்து வியாபாரம் பார்ப்பது தமிழகத்தில் 30 வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது.

சரி, இந்த மீனாட்சி சுந்தரம் மாட்டியவுடன் தமிழகத்தில் உள்ள எல்லா super stockist , stockist , sub stockist ,மெடிக்கல் ஷாப்களில் நமது அதிகாரிகள் பரிசோதனை செய்தார்கள். அதன் விளைவாக ஒவ்வொரு ஊரின் புறநகரிலும் அதிகாலையில் மூட்டை மூட்டையாக காலாவதி மருந்துகள் சிக்கின. ஆனால் வழக்கம் போல் ஊடகங்களில் மர்ம நபர்கள் கொட்டி விட்டு சென்றுள்ளனர் என்றனர். அதன்பின்பு அவ்வளவுதான், நாமும் நமது வேலையைப் பார்த்துகொண்டு உடம்பு சரியில்லை என்றால் டாக்டர் எழுதித் தருவதை சாப்பிட்டுவிட்டு என் குடும்பம்,என் புள்ளைங்க, எந்த நாய் செத்தா என்ன, புழைச்சா என்ன என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருந்தாலும் அந்த சம்பவம் எப்படி முற்றுப் பெற்றது என்பதை நான் சொல்லியேதான் ஆக வேண்டும்.

மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் , மருந்துக் கடைகளின் சங்கம் இன்னும் பல யோக்கியமான கழகம் , சங்கம், யூனியன் என பலதரப்பட்ட கண்ணியவான்கள் அன்றைய அரசின் முக்கிய அமைச்சரின் மருமகனுக்கு ஒரே ஒரு BMW கார் வாங்கிக்கொடுத்து பழையபடி போலி மருந்து மாத்திரை வியாபாரத்தை அமோகமாக, பிரமாதமாக, ஆர்ப்பாட்டமாக- தீபாவளி தமாக்காவாகப் வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார்கள் .

ஆகா, நமது உயிரின் விலை ஒரு BMW காரின் விலை.

-எர்னஸ்டோ குவேரா

நன்றி: உயிர்மை இணையம்

1 கருத்து:

Azhagan சொன்னது…

Corruption will bring the country down, for sure. God help us.

கருத்துரையிடுக